» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீசாரை அவதூறாக பேசிய வாலிபர் கைது: கஞ்சா பறிமுதல்

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:04:50 AM (IST)

கோவில்பட்டியில் கஞ்சா விற்றதாக பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சங்கரலிங்கபுரம் 3ஆவது தெருவில் உள்ள கிணறு அருகே அமர்ந்திருந்த ஒருவர் போலீசாரை அவதூறாகப் பேசியபடி கொலை மிரட்டல் விடுத்து ஓடினாராம். 

போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர் சங்கரலிங்கபுரம் 2ஆம் தெருவைச் சேர்ந்த முருகானந்தம் மகனான பெயிண்டர் ராஜா (37) என்பதும், 20 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory