» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போலீசாரை அவதூறாக பேசிய வாலிபர் கைது: கஞ்சா பறிமுதல்
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:04:50 AM (IST)
கோவில்பட்டியில் கஞ்சா விற்றதாக பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சங்கரலிங்கபுரம் 3ஆவது தெருவில் உள்ள கிணறு அருகே அமர்ந்திருந்த ஒருவர் போலீசாரை அவதூறாகப் பேசியபடி கொலை மிரட்டல் விடுத்து ஓடினாராம்.
போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர் சங்கரலிங்கபுரம் 2ஆம் தெருவைச் சேர்ந்த முருகானந்தம் மகனான பெயிண்டர் ராஜா (37) என்பதும், 20 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










