» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் திறப்பின் வாசல் ஜெப கூட்டம்: திரளானோர் பங்கேற்பு

திங்கள் 24, பிப்ரவரி 2025 7:39:31 PM (IST)



நாலுமாவடியில் சகோ. மோகன் சி.லாசரஸ் தலைமையில் நடந்த திறப்பின் வாசல் ஜெப கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் ஆங்கில மாதம் கடைசி சனிக்கிழமைகளில் திறப்பின் வாசல் என்னும் ஜெபக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இம்மாதத்திற்கான கடைசி சனிக்கிழமை  காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறப்பின் வாசல் ஜெபக்கூட்டம் நடந்தது. 

இயேசு விடுவிக்கிறார் ஜெப குழுவினர் பாடல்கள் பாடினர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தேவ செய்தி கொடுத்து, தேசத்தின் மக்களுக்காகவும், வியாதியஸ்தர்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory