» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியரைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

திங்கள் 24, பிப்ரவரி 2025 7:34:51 PM (IST)



விருதுநகர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கடந்த ஜனவரி மாதம் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து குமாரலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் உட்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.  இதனைக் கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தொடர் கண்டன ஆர்ப்பாட்டங்கள், மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் தற்காலிக பணியிடை நீக்கம் உத்தரவை திரும்ப பெறக்கோரியும் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சுப்பையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வட்டாரத் தலைவர் கருப்பசாமி பாண்டியன், வட்டச் செயலாளர் இசக்கிமுத்து, வட்ட பொருளாளர் கோபிநாத் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory