» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் : தமிழக அரசுக்கு கோரிக்கை!

திங்கள் 24, பிப்ரவரி 2025 12:24:06 PM (IST)



புனித வெள்ளியை முன்னிட்டு ஏப்.18ம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மறைமாவட்டம் அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை இயக்குநர் அருட்தந்தை ஜெயந்தன் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், "வருகிற மார்ச் 5ஆம் தேதி கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பமாகிறது. இயேசு இறந்த புனித வெள்ளி (ஏப்.18ம் தேதி) தினத்தை தியாகம் மற்றும் அமைதியின் நாளாக கிறிஸ்தவ மக்கள் கடைபிடித்து வருகின்றனோம். 

ஆகவே, ஏப்.18ம் தேதி அனைத்து மதுக்கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். "காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், மகாவீரர் ஜெயந்தி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு. சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் உழைப்பாளர் தினம்”, போன்ற சிறப்பு நாள்களோடு புனித வெள்ளி நாளையும் சேர்த்து சட்ட மன்றத்தில் கொள்கை மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory