» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் 2பேருக்கு கத்திக்குத்து : 5 பேர் கும்பல் வெறி செயல்

திங்கள் 24, பிப்ரவரி 2025 12:03:15 PM (IST)

தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் காதலன் உட்பட 2பேரை கத்தியால் குத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மாடசாமி (21), இவர் தூத்துக்குடியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஒரு இளம்பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம். இவர்களது காதல் அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவரவே, அவர்கள் அந்த பெண்ணை கண்டித்து உள்ளனர். ஆனால் அதையும்மீறி அவர் அவர் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்தாராம். 

இந்நிலையில் அந்த பெண்ணின் அண்ணன், மாடசாமிக்கு போன் செய்து அவரை சந்திக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து மாடசாமி தனது நண்பரான கால்டுவெல் காலனியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சீனிவாசன் (22), என்பருடன் பால விநாயகர் கோவில் தெருவில் வந்து நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் மாடசாமியை சரமாரியாக கத்தியால் குத்தினர். 

இதை தடுத்த சீனிவாசனுக்கும் கத்தி குத்து விழுந்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த மாடசாமி, சீனிவாசன் ஆகிய 2பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் மத்திய பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை அய்யனார் காலனியைச் சேர்ந்த சிவராமன் உட்பட 5பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory