» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அளவுக்கு அதிகமாக மது குடித்த ஐஸ் கம்பெனி ஊழியர் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!

திங்கள் 24, பிப்ரவரி 2025 11:36:44 AM (IST)

தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்த ஐஸ் கம்பெனி ஊழியர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி வி.இ., ரோடு, அந்தோணியார் கோவில் அருகே டாஸ்மார்க் மதுபான கடை உள்ளது. இந்த கடை அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக தென்பாகம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் ஏரலைச் சேர்ந்த மாரி கிருஷ்ணன் (40) என்பதும், தூத்துக்குடி தெற்கு ராஜா தெருவில் உள்ள ஒரு ஐஸ் கம்பெனியில் கடந்த ஒரு வார காலமாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக அவர் மது குடித்துள்ளார். இதனால் அவர் மயங்கி விழுந்து இறந்து இருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இது சம்பந்தமாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory