» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்குகள் மோதல்: முதியோர் இல்ல நிர்வாகி உயிரிழப்பு

திங்கள் 24, பிப்ரவரி 2025 11:30:35 AM (IST)

விளாத்திகுளம் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் முதியோர் இல்ல நிர்வாகி உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் சேகர் (62), இவர் நாகலாபுரம் வட்டார கல்வி வளர்ச்சி குழு செயலாளராக உள்ளார். மேலும் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். இவர் இன்று காலை வீட்டில் இருந்து தனது பைக்கில் முதியோர் இல்லத்திற்கு நாகலாபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து,  நாகலாபுரம் அருகே உள்ள ரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த மாரி பாண்டி மகன் மெர்லின் (19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory