» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்குகள் மோதல்: முதியோர் இல்ல நிர்வாகி உயிரிழப்பு
திங்கள் 24, பிப்ரவரி 2025 11:30:35 AM (IST)
விளாத்திகுளம் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் முதியோர் இல்ல நிர்வாகி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் சேகர் (62), இவர் நாகலாபுரம் வட்டார கல்வி வளர்ச்சி குழு செயலாளராக உள்ளார். மேலும் முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். இவர் இன்று காலை வீட்டில் இருந்து தனது பைக்கில் முதியோர் இல்லத்திற்கு நாகலாபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, நாகலாபுரம் அருகே உள்ள ரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த மாரி பாண்டி மகன் மெர்லின் (19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










