» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாய் குறுக்கே வந்ததால் விபத்து: முதியவர் சாவு

திங்கள் 24, பிப்ரவரி 2025 8:41:48 AM (IST)

கோவில்பட்டி அருகே நாய் குறுக்கே வந்ததால் பைக் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்த முதியவர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து சண்முக சிகாமணி நகர் 5-வது தெருவை சேர்ந்த மகாலிங்க மகன் சுந்தரம் (84). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் மந்திதோப்பு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். மந்தித்தோப்பு சாலை அண்ணாமலை நகர் அருகே சென்றபோது, நாய் ஒன்று குறுக்கே ஓடியுள்ளது. 

இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தனர் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory