» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி ஆற்றில் குளித்த வாலிபர் திடீர் மாயம் : தேடும் பணி தீவிரம்!

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 7:24:15 PM (IST)

ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மாயமான வாலிபரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகரைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் முகேஷ் கண்ணன் (20). இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் இன்று மதியம் 2 மணி அளவில் ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். சேர்மன் கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற அவர் மாயமாகி விட்டார். 

அப்போது உடன் குளித்துகொண்டிருந்த நண்பர்கள் அவரை தேடியும் கண்டுபிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து ஏரல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து முகேஷ் செல்வனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும உறவினர்கள் சம்பவ இடத்தில் வந்தனர். இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory