» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 1000 லிட்டர் டீசல் பறிமுதல் : ஒருவர் கைது

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 10:03:21 AM (IST)



தூத்துக்குடியில் வீட்டில் 1000 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்த பாலன் என்பவர் திரேஸ்புரம் அருகே மீன்வளத் துறைக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்த அவர், 50 லிட்டர் பேரல்களில் தலா 40 லிட்டர் டீசல் வாங்கினாராம். அவற்றில், ஏற்கெனவே 10 லிட்டர் டீசல் இருந்ததாம். சந்தேகமடைந்த ஊழியர்கள் இதுகுறித்து வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில், போலீசார் பாலனின் வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு பல கேன்களில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், அவர் முறைகேடாக பழைய டீசலுடன் புதிய டீசலைக் கலந்து மீன்பிடிப் படகுகளுக்கு விநியோகித்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, சுமார் ஆயிரம் லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory