» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரேஷன் கடை ஊழியருக்கு மிரட்டல்: வாலிபர் கைது

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 10:00:39 AM (IST)

கோவில்பட்டியில் ரேஷன் கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவர் பாஸ்கரன். சம்பவத்தன்று இவர் பாரதி நகர் மேட்டுத் தெருவில் உள்ள அமுதம் நியாயவிலை கடையில் பணியில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த சாஸ்திரி நகரைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் சின்னஜமீன் (33), நியாய விலைக் கடையின் கணக்குகளைக் காண்பிக்குமாறு பாஸ்கரனிடம் தகராறு செய்துள்ளார். மேலும், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.500-ஐப் பறித்துச் சென்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிந்து சின்னஜமீனை கைது செய்தனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory