» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு மகளிர் பள்ளியில் ரூ.2.06 கோடியில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 9:55:20 AM (IST)



கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.06 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.2.06 கோடி மதிப்பில் 2 தளங்களுடன் 11 வகுப்பறைகள் கொண்டதாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற விழாவில் நகர்மன்றத் தலைவர் கா. கருணாநிதி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பிரபாகரன், பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயலதா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மாரீஸ்வரன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory