» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 9:50:59 AM (IST)

தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியிலிருந்து வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் கடத்தப்படவுள்ளதாக, கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமர், தலைமைக் காவலர்கள் கோவிந்தராஜ், இருதயராஜ், குமார், இசக்கிமுத்து உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர் ரோந்து சென்றனர்.

நேற்று கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 மூட்டைகளைக் கைப்பற்றி, சோதனையிட்டபோது, 80 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றின் இலங்கை மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும். இதனை கடத்த முயன்றவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory