» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகள் கோவில் கமிட்டி நிர்வாகத்திற்கு உதவிக்கரம்!

சனி 21, டிசம்பர் 2024 3:18:03 PM (IST)



தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கப்பட்டதில் குலதெய்வ வழிபாட்டை இழந்த கோவில் கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கு விமான நிலைய அதிகாரிகள் ரூ.2லட்சம் நிதியுதவி வழங்கினர். 

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதில் முடிவைத்தானேந்தல் பகுதியில் மக்கள் வழிபட்டு வந்த குல தெய்வமான செக்கடிமாடன் திருக்கோவில் கோவிலை இழந்தனர். இந்த நிலம் புறம்போக்கு நிலத்துக்கு சொந்தமானது என்பதால் வருவாய்த்துறை அதிகாரிகளால் இழப்பீடு வழங்க முடியவில்லை. இது தொடர்பாக உள்ளூர் கிராமவாசிகள் விமான நிலைய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலைய உறுப்பினர்களிடமிருந்து தன்னார்வப் பங்களிப்பாக சுமார் ரூ.2 லட்சம் நிதியுதவியை விமான நிலைய இயக்குநர் எஸ்.ராஜேஷ் ஆர் மற்றும் குழுவினர் கோவில் கமிட்டி உறுப்பினர்களை கவுரவித்து, அவர்களுக்கு தொகையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற கர்னல் சுந்தரம், பிரான்சிஸ் வில்லியம், ஜேஜிஎம், காட்வின்-டிஜிஎம்,  பிரிட்டோ-ஏஜிஎம் மற்றும் தூத்துக்குடி விமான நிலைய மூத்த அதிகாரிகள் கலந்து காெண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory