» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தப்பு தாளங்களுடன் துண்டு பிரசுரங்களை வழங்கி பாஜகவினர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு!

புதன் 17, ஏப்ரல் 2024 10:41:28 AM (IST)



எட்டையபுரத்தில் பாஜகவினர் தப்பு தாளங்களுடன் துண்டு பிரசுரங்களை வழங்கி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி பாஜக கூட்டணி (தமாகா) வேட்பாளர் விஜய் சீலனுக்கு எட்டையபுரத்தில் பாஜக-வினர் தப்பு தாளங்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளைக் கூறியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

மேலும் எட்டையபுரம் பஜார் பகுதியில் பாஜக நிர்வாகிகள் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசி... பாஜகவின் சாதனைகள் பொதுமக்களுடன் எடுத்துக் கூறி, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வரவேண்டும் என்றால் பாஜக கூட்டணி வேட்பாளர் விஜய சிலனுக்கு "சைக்கிள்" சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory