» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டவிரோதமாக பதுக்கிய 100 மதுபாட்டில்கள் பறிமுதல்: இளைஞர் கைது!
திங்கள் 29, ஏப்ரல் 2024 8:36:12 PM (IST)
சாத்தான்குளம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 100 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், தட்டார்மடம் பகுதியில் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் அனிதா தலைமையில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது முதலூர் பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் நெல்லை மாவட்டம் உறுமன் குளத்தைச் சேர்ந்தவர் சுயம்பு மகன் ஆறுமுக கார்த்திக் (23) எனவும், விற்பனை செய்ய 100 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடு¢¢த்து போலீசார் அவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.