» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நீர் மோர் பந்தல்: அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்

திங்கள் 29, ஏப்ரல் 2024 3:07:50 PM (IST)



தூத்துக்குடி மாநகரம் மூன்றாவது மைல் பகுதியில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்படி கோடை காலத்தில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் வகையில் தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் நீர் மோர் பந்தலை திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதியும் மாமன்ற உறுப்பினருமான இசக்கி ராஜா, மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார், வட்டச் செயலாளர்கள் பொன் பெருமாள், சுரேஷ், மந்திரகுமார், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory