» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டிக் கம்பன் கழகத்தின் மாதக் கூட்டம்

திங்கள் 29, ஏப்ரல் 2024 3:00:47 PM (IST)



கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் 32வது மாதக் கூட்டம் புனிதஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது.  

கூட்டத்திற்கு கம்பன்கழக துணைத் தலைவர் இராஜாமணி தலைமை வகித்தார். கோவில்பட்டிக் கம்பன் கழக நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி, பிஸியோதெரபிஸ்ட்   செல்வின் ஜூலியஸ்,கடம்பூர் தொழிலதிபர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  செயலாளர் சரவணச் செல்வன் வரவேற்றார்.  

மாணவர் உரை நிகழ்வில் முதலில் மதுரை கல்லூரி மாணவர் அரவிந்த பிரகாஷ் கலந்து கொண்டு "கம்பனில் கந்தன்” என்ற பொருளின் முருக கடவுளின் பெருமைகளை பட்டியல் இட்டு அரங்கம் அதிர பேசினார்.  தொடர்ந்து   மதுரை பேராசிரியர் செந்தூரன் கலந்து கொண்டு தனது கம்பீர குரல் வளத்துடன் கருத்து செறிவுடன், தேவையான பாடல்களை பாடி மகிழ்ந்து "கம்பனை நேசிப்போம் " என்ற தலைப்பில் பேசினார். 

முடிவில் ஒருங்கிணைப்பாளர் சுனையரசன் நன்றி கூறினார். செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கோவில்பட்டி கம்பன் கழக தலைவர் புனித ஓம் லட்சுமணப்பெருமாள் ஆலோசனைப்படி பொருளாளர் வினோத் கண்ணன், இணைச் செயலாளர் மதிவானன் மற்றும் புரவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory