» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி விடுதிக் காப்பாளர் தற்கொலை : போலீஸ் விசாரணை!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 5:26:43 PM (IST)

நாசரேத்தில் தனியார்  கல்லூரி விடுதிக் காப்பாளர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அருகிலுள்ள ஓடக்கரையைச் சேர்ந்தவர் ஞானசேகரன் மகன் அமுதன்  (25) கடந்த நான்கு வருடங்களுக்கு முன் நாசரேத் தனியார் கல்லூரியில் இரவு நேர விடுதிக் காப்பாளராக பணியில் சேர்ந்தார். நேற்று அதிகாலையில் பணியை முடித்துவிட்டு தூங்க சென்றவர் விடுதிக்கு பின்னால் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து  நாசரேத் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாத்தான்குளம் டி.எஸ்.பி. கென்னடி, நாசரேத் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஞானசேகரன் கொடுத்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory