» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமறையூர் மறுரூப ஆலயத்தில் மாபெரும் பேரணி

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 5:21:24 PM (IST)



பெண்கள் பண்டிகையை முன்னிட்டு திருமறையூர் மறுரூப ஆலயத்தில் மாபெரும் பேரணி நடந்தது. 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பெண்கள் ஐக்கிய சங்க பண்டிகையை முன்னிட்டு மாபெரும் பேரணி நடந்தது. சேகர தலைவர் ஜான் சாமுவேல் தலைமை வகித்தார். சபை ஊழியர் ஸ்டான்லி ஜெபித்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி ஆலயத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

முன்னதாக பண்டிகையை முன்னிட்டு ஆலயத்தில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடந்தது. திருமறையூர் பெண்கள் ஐக்கிய சங்க தலைவி கோல்டா சாமுவேல் தேவ செய்தி கொடுத்தார். பின்னர் பெண்கள் கூடுகை நிகழ்ச்சி நடந்தது. சாந்தினி கிளாட்ஸ்டன் தேவ செய்தி கொடுத்தார். இதனை தொடர்ந்து பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory