» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் எஸ்.பி., தபால் வாக்குப் பதிவு : ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்!
செவ்வாய் 16, ஏப்ரல் 2024 3:32:54 PM (IST)
தூத்துக்குடியில் பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தபால் ஓட்டை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினருக்கான தபால் ஓட்டு வாக்குப்பதிவு நடைபெறுவதையடுத்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தனது தபால் ஓட்டை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.