» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சி : ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 12:52:10 PM (IST)



விளாத்திகுளம்  சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியை தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் வாக்குப் பதிவு வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு எட்டயபுரம் சி.கே.டி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

இப்பயிற்சியை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் வாக்கு வழங்குவதற்கும், வழங்கப்பட்டுள்ள தபால் வாக்குகளை மீண்டும் செலுத்துவதற்கும் ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதி மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory