» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடிக்கு லாரிகளில் வந்த தென்னை மரங்கள் : கடல்வழியாக மாலத்தீவுக்கு ஏற்றுமதி!!
செவ்வாய் 16, ஏப்ரல் 2024 10:13:45 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து சுமார் 200 தென்னை மரங்கள் கடல் வழியாக கப்பலில் மாலத்தீவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கற்கள், மணல், சிமென்ட் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து சுமார் 200 தென்னை மரங்கள் கடல் வழியாக மாலத்தீவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக கோவையில் இருந்து கண்டெய்னர் லாரிகளில் தென்னை மரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தென்னை மரங்கள் காயாமல் இருப்பதற்காக நவீனமுறையில் உரம் மண் மூலம் பதப்படுத்தப்பட்டு பாலித்தீன் பைகள் மூலம் வேர்கள் காயாதவண்ணம் பாதுகாக்கப்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனை மாலத்தீவில் இறக்குமதி செய்யப்பட்டு அங்கு நவீனமுறையில் நடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
P.M.GangadharanApr 17, 2024 - 07:30:54 AM | Posted IP 162.1*****
ஆட்சியாளர்களுக்கான வேண்டுகோள்.
இந்தியாவல் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் உற்பத்தித் துறை வேலைவாய்ப்பு பெருகும்,நாட்டிற்கும் வருவாய் ஈட்டித்தரும்.ஆனால் இயற்கையின் கொடையான *மணல்,கற்கள்* போன்றவற்றை ஏற்றுமதி செய்யாதீர்கள்* .உங்களுக்கு அந்த உரிமையே இல்லை.இயற்கை வளங்கள் அடுத்த தலைமுறையின் சொத்து.நல்ல ஆட்சியாளர்களாக இருந்தால் உங்களுக்கான பார்வை இப்படித்தான் இருக்கும்.கனிமங்கள் திருடி ஏற்றுமதி செய்வது கேவலம்.
செல்வகணேசன்Apr 16, 2024 - 09:56:36 PM | Posted IP 162.1*****
எதிரியாக நம்மை பாவித்து எதிரி நாட்டுடடன் கூட்டு சேர்ந்தவனுக்கு அனுப்பலாமா நண்பரே
யாரு ?Apr 16, 2024 - 12:02:26 PM | Posted IP 172.7*****
இந்தியாவுக்கு எதிரியாக செயல்படும் மாலத்தீவுக்கு இங்குள்ள எவண்டா அனுப்பினது?
Chandrasekaran SApr 17, 2024 - 03:53:15 PM | Posted IP 162.1*****