» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கண்மாயில் மூழ்கி 14 வயது சிறுவன் பலி: விளாத்திகுளம் அருகே பரிதாபம்!
ஞாயிறு 7, ஏப்ரல் 2024 10:30:53 AM (IST)
விளாத்திகுளம் அருகே கண்மாய் நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் மகன் பாஸ்கர்வேல் (13), பூதலாபுரம் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் ஊரில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்ற பாஸ்கர்வேல் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினான்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் நீண்ட தேடுதலுக்கு பின் நீரில் மூழ்கி இறந்த பாஸ்கர்வேல் உடலை மீட்டனர். இதனை அடுத்து தகவல் அறிந்த காடல்குடி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.