» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேருந்து நிலையத்தில் கீழே விழுந்து லாரி டிரைவர் பலி
ஞாயிறு 7, ஏப்ரல் 2024 8:35:48 AM (IST)
கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற லாரி டிரைவர் பலி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சைக்கிள் நிறுத்தம் எதிரேயுள்ள சாலையில் இளைஞா் ஒருவா் இறந்து கிடப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், அவா் விருதுநகா் மாவட்டம், பட்டம்புதூா் அருகேயுள்ள குப்பாம்பட்டி, புதுகாலனியைச் சோ்ந்த வெங்கடாசலபதி மகன் லாரி ஓட்டுநா் சுந்தரமூா்த்தி (23) எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.