» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்து நிலையத்தில் கீழே விழுந்து லாரி டிரைவர் பலி

ஞாயிறு 7, ஏப்ரல் 2024 8:35:48 AM (IST)

கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் நடந்து சென்ற லாரி டிரைவர் பலி  கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சைக்கிள் நிறுத்தம் எதிரேயுள்ள சாலையில் இளைஞா் ஒருவா் இறந்து கிடப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், அவா் விருதுநகா் மாவட்டம், பட்டம்புதூா் அருகேயுள்ள குப்பாம்பட்டி, புதுகாலனியைச் சோ்ந்த வெங்கடாசலபதி மகன் லாரி ஓட்டுநா் சுந்தரமூா்த்தி (23) எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory