» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தல் புறக்கணிப்பு: கிராம மக்கள் அறிவிப்பு
ஞாயிறு 7, ஏப்ரல் 2024 8:18:47 AM (IST)
மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஆராம்பண்ணை கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், "வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஓட்டு போடுவதில்லை என அனைத்து சமுதாய மக்களும் ஒன்று கூடி முடிவு செய்துயுள்ளோம். எங்க ஊரில் ஆற்றில் அமைந்துள்ள குடி நீர் உரைகிணறு பழுதாகி 8 ஆண்டுகளாகியும் அதை சரி செய்து தரும் படியும் தாமிரபரணி ஆற்று தடுப்பு சுவர் கட்டிதரும்படியும் எங்கள் தொகுதி எம்பி, எம்எல்ஏ விடமும் பலமுறை புகார் மனு மூலமாகவும் நேரடியாகவும் தெரியப்படுத்திருந்தோம். ஆனால் இது நாள் வரை எந்த ஓர் நடவடிக்கைகள் எடுத்தாக தெரியவில்லை.
கடந்த முறை 2019 கனிமொழி வாக்கு கேட்டு வந்த போது உரை கிணறு சம்மந்தமாக. நான் வெற்றி பெற்று வந்தால் சரி செய்து தருவேன் என வாக்குறுதி தந்தார்கள் காலம் 5 ஆண்டு கடந்துவிட்டது தாமிரபரணி ஆற்று கரையோர இருக்கும் எங்கள் ஊருக்கு கரை தடுப்பு சுவர் அமைத்து தரும்படியும் ஊர் மக்களின் கோரிக்கையை நிரைவேற்றாத காரணத்தினாலும் பாதுகாப்பற்ற சூழ் நிலையில் வாழ்ந்து வரும் நாங்கள் யாருக்கும் ஓட்டு போட மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
TN69Apr 7, 2024 - 08:50:45 AM | Posted IP 162.1*****