» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வெடிகுண்டு நிபுணர் குழு தீவிர சோதனை

ஞாயிறு 7, ஏப்ரல் 2024 8:03:37 AM (IST)



தூத்துக்குடியில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில்  காவல்துறை வெடிகுண்டு நிபுணத்துவ குழுவினர் தீவிர சோதனை நடத்தினர்.

வரும் 19.04.2024 அன்று நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ள காவல்துறை வெடிகுண்டு நிபுணத்துவ குழுவினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்படி உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறை வெடிகுண்டு நிபுணத்துவ குழுவினர் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், கடற்கரை பகுதிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் உள்ள சந்தேகப்படும்படியான பார்சல்கள், மூட்டைகள், பைகள் ஆகியவற்றை சோதனை செய்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மேலும் மேற்படி காவல்துறை வெடிகுண்டு நிபுணத்துவ குழுவினர் தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுபாப்பு நடவடிக்கையாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory