» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷ விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சனி 6, ஏப்ரல் 2024 8:35:11 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. 

தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுரை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத மகா சனி பிரதோஷ விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகா சனி பிரதோஷம் அன்று சிவாலயம் சென்று வழிபட்டால் கஷ்டங்கள் தீர்ந்து நல்லது நடக்கும் என்பது ஐதீகம். இதைத்தொடர்ந்து மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு சங்கர ராமேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், விபூதி உள்ளிட்ட 14 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து சுவாமி மற்றும் நந்தி பகவான் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் வீதி உலா நடைபெற்றது. அப்போது வீதி உழாவில் வந்த பக்தர்கள் சிவாய நமக, சிவாய நமக என்ற பக்தி கோசத்தை முழங்கியபடி வீதி உலா சென்றனர் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டனர்.

செய்துங்கநல்லூர் கோயிலில் 

செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள மிகவும் பழமையான செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் ஆலயம், முத்தாலங்குறிச்சி சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலயங்களில் சனிப்பிரதோஷம் மிகச்சிறப்பாக நடந்தது. முத்தாலங்குறிச்சியிலி சிவன், லெட்சுமி நரசிம்மர், ராம விநாயகருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. சனி பிரதோஷத்தினை முன்னிட்டு சிவன், நந்தி பகவான், சிவகாமி, பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர் சேகர் கம்பர் செய்திருந்தார்.

செய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர், சிவகாமியம்மாள், நந்தி தேவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. சனி பிரதோஷத்தினை முன்னிட்டு சப்பரத்தில் சுவாமி அம்பாள் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பூஜைகளை அர்ச்சகர் முத்துராமன் செய்திருந்தார். ஏற்பாடுகளை அறங்காவலர் குருமாரியப்பன் தலைமையில் ஆன்மிக பக்த பேரரவையினர் செய்திருந்தனர்.

கட்டாரிமங்கலம் கோயிலில்

கட்டாரிமங்கலம் சிவன் கோயிலில் சனிபிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் அருள்தரும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தர் திருக்கோயிலில் பங்குனி மாத சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.  பூஜையையொட்டி மாலை 4 மணிமுதல் நந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான  அபிஷேகம்,சிறப்பு அலங்கார தீபாராதனை, மாலை 5 மணிக்கு சுவாமி சப்பரத்தில் வலம் வருதல், தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். பூஜை ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜபிள்ளை மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory