» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தொகுதியில் 31 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு!
வியாழன் 28, மார்ச் 2024 3:59:26 PM (IST)
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக உட்பட 31 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை பரீசிலனை செய்யும் பணி தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகள் உட்பட 31வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் மாற்று வேட்பாளர்கள், சுயேட்சைகள் உட்பட 22பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.