» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே கார் மோதி பெண் பலி!

சனி 27, ஏப்ரல் 2024 10:59:00 AM (IST)

தூத்துக்குடி அருகே சாலையை கடக்க முயன்றபோது, கார் மோதி படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

தூத்துக்குடி அருகிலுள்ள முக்காணி, பாரதி நகரைச் சேர்ந்தவர் முனியசாமி மனைவி ராஜலட்சுமி (40). இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலை முக்காணி ரவுண்டானா அருகே ரோட்டை கடந்து செல்ல முயன்றபோது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் இவர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராஜலட்சுமி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த தூத்துக்குடி பூபால்ராயர் புரத்தை சேர்ந்த அண்டோ (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory