» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை : போலீசார் விசாரணை

சனி 27, ஏப்ரல் 2024 11:02:16 AM (IST)

நாசரேத்தில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மணி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் பெருமாள் (21). இவர் நாசரேத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

இது குறித்து நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்த மாணவரின் உடல் பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory