» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாம்பு கடித்து தனியார் நிறுவன காவலாளி பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!

சனி 27, ஏப்ரல் 2024 10:50:17 AM (IST)

தூத்துக்குடியில் பாம்பு கடித்து தனியார் நிறுவன காவலாளி பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மேலத் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் ராமசாமி (74). இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் இரவு வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து வந்தார். கடந்த 25ஆம் தேதி இரவு அவர் பணியில் இருந்தபோது, விஷ பாம்பு ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது. 

இதில் மயக்கம் அடைந்து உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory