» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.80 ஆயிரம் பறிமுதல்!

வியாழன் 28, மார்ச் 2024 3:27:33 PM (IST)



கோவில்பட்டியில் அருகே உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் பறக்கும் படையினா் தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனந்தலட்சுமி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது தென்காசி மாவட்டம் கடையாலுருட்டி பகுதியைச் சேர்ந்த மால்குடிசாமி ஓட்டி வந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்த போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.80 ஆயிரம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை  பறிமுதல் செய்து கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாள், மற்றும் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வெள்ளத்துரை ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory