» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நள்ளிரவில் பைக் எரிந்து சேதம் : போலீஸ் விசாரணை!!
வியாழன் 28, மார்ச் 2024 10:30:22 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் எரிந்து சேதமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முள்ளக்காடு சாமி நகரைச் சேர்ந்தவர் பாலசாமி மகன் சுடலை மாடசாமி (30). இவர் நேற்று முன்தினம் இரவு தேவி நகரில் உள்ள மாமானார் வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தியிருந்தாராம். நள்ளிரவில் பைக் திடீரென எரிந்து சேதமானது. இது தொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சுடலை மாடசாமி புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.