» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை வழங்க பிப்.10ல் சிறப்பு முகாம்!

புதன் 7, பிப்ரவரி 2024 5:23:56 PM (IST)

தூத்துக்குடியில் வருகிற 10ஆம் தேதி மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

"மக்களுடன் முதல்வா”; என்ற திட்ட முகாமில் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 17.12.2023, 18.12.2023 அன்று ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிதிலமடைந்த தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை  தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போட் சைஸ் புகைப்படம் -5 அனைத்து ஆவணங்களுடன் வருகின்ற 10.02.2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும்  முகாம் நடைபெறவுள்ளது. 

மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,   தொவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory