» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை வழங்க பிப்.10ல் சிறப்பு முகாம்!
புதன் 7, பிப்ரவரி 2024 5:23:56 PM (IST)
தூத்துக்குடியில் வருகிற 10ஆம் தேதி மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
"மக்களுடன் முதல்வா”; என்ற திட்ட முகாமில் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 17.12.2023, 18.12.2023 அன்று ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிதிலமடைந்த தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போட் சைஸ் புகைப்படம் -5 அனைத்து ஆவணங்களுடன் வருகின்ற 10.02.2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.
மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தொவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










