» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி : போலீசார் விசாரணை!

புதன் 29, நவம்பர் 2023 11:05:55 AM (IST)

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை மாவட்டம் பேரையூர் அருகில் உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகில் உள்ள சில்லாங்குளம் கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவி அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகிறார். 

இந்நிலையில் அந்த மாணவி நேற்று தலைச்சாயம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பசுவந்தனை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory