» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடம்: புதிய இடத்திற்கு மாற்ற மாணவ, மாணவிகள் கோரிக்கை!

திங்கள் 27, நவம்பர் 2023 3:09:27 PM (IST)



கோவில்பட்டி அருகே பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடத்திற்கு பதில் புதிய இடத்திற்கு பள்ளியை மாற்றம் வேண்டும் என மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக  ஊத்துப்பட்டி பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பொதுமக்கள் ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, ஊத்துப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெற்கு குமாரபுரம் ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.  அந்த ஊரில் ஒரு குழந்தை மட்டுமே படித்து வருகிறார். ஆனால் வடக்கு குமராபுரத்தில் 6 குழந்தைகள், குமராபுரம் காலனியில் 16 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். 

பள்ளி உள்ள தெற்கு குமராபுரத்தில் எந்த பாதை வசதியும் இல்லை. எனவே பள்ளி செல்லும் குழந்தைகள் 09.11.2023 அன்று முதல் இன்று வரை பள்ளிக்கு செல்லவில்லை. இப்படி இருக்கும் சூழ்நிலையில் பள்ளியை குமாரபுரம் காலனிக்கு மாற்றி புதிய பள்ளி கட்டிடம் வழங்கினால் குழந்தைகள் எவ்வித சிரமம்மின்றி சென்று வர வசதியாக இருக்கும். அதற்கு வசதியாக குமராபுரம் காலனி அருகில அரசு தரிசு நிலம் உள்ளது. இதை பயன்படுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பள்ளி கட்டிடத்தை புதிய இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory