» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடந்தை குளவி கொட்டியதில் 5 மாணவிகள் காயம்: அரசு மருத்துவமனையில் அனுமதி!

வியாழன் 23, மார்ச் 2023 4:09:38 PM (IST)

ஓட்டப்பிடாரத்தில் பள்ளியில் கடந்தை குளவி கொட்டியதில் காயம் அடைந்த 5மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் டிஎம்பி மெக்கவாய் மேல்நிலைப் பள்ளி   உள்ளது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் வெளியே வரும்போது மரத்தில் இருந்த கடந்தை குளவிகள் அவர்களை கொட்டியது. இதில் யோகலட்சுமி, முகிலா, மோனிகா, கல்பனா, எஸ்தர்ராணி  ஆகிய 5 மாணவிகள் காயம் அடைந்தனர். 

அவர்கள் அனைவரும் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், ஆணையளர் சிவபாலன், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் மாணவிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory