» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணின் மனதை திருடிய வாலிபர் கைது: வைரலாகும் திருமண வாழ்த்து பேனர்!

திங்கள் 14, நவம்பர் 2022 8:06:24 PM (IST)



சாத்தான்குளம் அருகே திருமண விழாவிற்கு வித்தியாசமான முறையில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் கிராமத்தை சேர்ந்த பகீரதன் - ரோஸிட்டா தம்பதியினருக்கு திருமண விழாவை முன்னிட்டு, அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் திருமண விழாவிற்கு வைத்த பேனர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி அந்த பேனரில் செய்தி நாளிதழில் வரும் செய்தி தலைப்புகள் போல "சுப்பராயபுரத்தில் பரபரப்பு - வாலிபர் கைது" என்ற தலைப்பில் வினோதமான முறையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்த பேனரில் "பெண்ணின் மனதை திருடியது குற்றம்" எனவும் அந்தக் குற்றத்திற்கு முக்கிய சாட்சிகளாக 10 பேர் சேர்க்கப்பட்டு, அவர்களது புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றத்தை கண்டுபிடிக்க துப்பு கொடுத்தது மணமகன் குடும்பத்தினர் எனவும், இந்த குற்றத்திற்கு தண்டனையாக மூன்று முடிச்சு போடுவதை தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த அந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

VinsJan 24, 2023 - 08:34:22 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் சகோ

அடNov 14, 2022 - 08:41:31 PM | Posted IP 162.1*****

இது ஒரு செய்தியா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory