» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டுத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டின் 444-வது பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு முதலாம் திருப்பலியும், 6 மணிக்கு இரண்டாம் திருப்பலியும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில், பேராலயப் பங்குத்தந்தை ஸ்டார்லின் முன்னிலையில் பனிமய மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி எடுத்து வரப்பட்டது.
பேராலய வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஜெபத்துடனும், கரவொலியுடனும் திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அப்போது உலக அமைதியை வலியுறுத்தும் வகையில் பக்தர்கள் வெண்புறாக்களைப் பறக்கவிட்டனர். கொடியேற்றத்திற்கு முன்னதாகப் பக்தர்கள் நேர்த்திக்கடனாகக் கொண்டு வந்த பால் மற்றும் பழங்கள் கொடிமரத்தில் வைக்கப்பட்டு, பின்னர் அனைவருக்கும் வழங்கப்பட்டன. கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு பனிமய மாதாவுக்குப் பொன் மகுடம் அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த.சரத்குமார், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியர் விஷா மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குப்தா
உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு மொழிகளில் சிறப்புத் திருப்பலிகள், பிரார்த்தனைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆகஸ்ட் 5 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாநாட்களை முன்னிட்டுத் தூத்துக்குடி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதுடன், பலத்த காவல் துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)

7,000 வாட் வரி வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தல் : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மனு!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:08:07 AM (IST)








