» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

தூத்துக்குடி ரோச் பார்க் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகக் கஞ்சா வைத்திருந்த வாலிபரைத் தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தெற்கு பகுதிக்குட்பட்ட ரோச் பார்க் பகுதியில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையில் காவல்துறையினர் தீவிர தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவரின் மகன் ஜேம்ஸ் சந்தோஷம் (27) என்பதும், அவர் சட்டவிரோத விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, ஜேம்ஸ் சந்தோஷத்தைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ பொருட்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 9:27:40 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடி பவனி கோலாகலம்!
சனி 25, ஜூலை 2026 9:19:22 PM (IST)

பருவமழைக்கு முன் பாசனக் கால்வாய்கள், குளங்களை சீரமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!
சனி 25, ஜூலை 2026 8:18:31 PM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சனி 25, ஜூலை 2026 5:26:23 PM (IST)

தூத்துக்குடி வாலிபர் அருணாச்சலம் குடும்பத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் தொலைபேசியில் ஆறுதல்!
சனி 25, ஜூலை 2026 4:40:37 PM (IST)

திருச்செந்தூரில் பல கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : சுற்றுலாத்துறை இயக்குநர் நேரில் ஆய்வு!
சனி 25, ஜூலை 2026 3:11:25 PM (IST)








