» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!

ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

Kanimozhi43iiarunach.jpg

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், காவல் துறை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி  எம்பி குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடிக்கு வருகை தந்த கனிமொழி, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது, நாடு முழுவதும் போராடிய இளைஞர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு போராடி மத்திய அரசை எதிர்கொண்டு வென்று காட்டியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை இளைஞர்கள் முன்வைக்கிறார்கள். திமுக தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையும் அதுவே ஆகும். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உருவாகும்" என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர்: "தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த காவல் துறையைப் பயன்படுத்தாமல், அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை ஒடுக்குவதற்கே காவல் துறை பயன்படுத்தப்படுகிறது. போராடிய மாணவர்கள் மீதும் காவல் துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.

உயிரிழந்த அருணாச்சலம் குடும்பத்தினருக்கு ஆறுதல்:

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த அருணாச்சலத்தின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தச் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் பி. கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது, "காவல்துறை தாக்கியதால்தான் எங்கள் மகன் உயிரிழந்தான்; சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அருணாச்சலத்தின் பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர். அதற்குப் பதிலளித்த கனிமொழி, "இந்த வழக்கில் முழுமையான நீதி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். திமுக எப்போதும் உங்கள் குடும்பத்துடன் இருக்கும்" என்று உறுதியளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory