» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!

ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

ஆறுமுகனேரியில் ஓய்வு பெற்ற ஊழியரின் பூட்டிய வீட்டின் கதவை உடைத்துத் திருட முயன்ற வழக்கில் இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி ஏ.ஐ.டி.யு.சி காலனியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவியுடன் கடந்த ஜூன் 19-ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காகக் கன்னியாகுமரியில் உள்ள மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அடுத்த நாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரர் சுந்தரபாண்டியன் வீட்டின் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவருக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஊருக்குத் திரும்பி வந்து பார்த்த சுந்தரபாண்டியன், வீட்டில் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை என்பதை உறுதி செய்தார்.

வீட்டின் கதவை உடைத்துத் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் சுந்தரபாண்டியன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இத்திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள் காயல்பட்டினம் ரத்தினாபுரியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா (36) மற்றும் முத்துசாமி (39) என்பது தெரியவந்தது.

இந்நிலையில், காயல்பட்டினம் பகுதியில் மற்றொரு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுவதற்காகச் சுற்றித் திரிந்த கார்த்திக்ராஜா மற்றும் முத்துசாமி ஆகிய இருவரையும் காவல்துறையினர் பிடித்துக் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory