» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடி பவனி கோலாகலம்!

சனி 25, ஜூலை 2026 9:19:22 PM (IST)

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, கொடி பவனி கோலாகலமாக நடைபெற்றது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை 11 நாட்கள் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு பேராலயத்தின் 444-வது ஆண்டு பெருவிழா நாளை 26-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா நாளைக் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், அதன் தொடக்க நிகழ்வாக இன்று மாலை கொடி பவனி நடைபெற்றது. பாப்பரசர் ஆண்டவர் பேராயரின் தூதுவரும், பேராலயப் பங்குத்தந்தையுமான மரிய வளன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 

இதில் திரளான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பனிமய மாதாவிற்கான பல்வேறு காணிக்கைப் பொருட்களுடனும், பிரார்த்தனை கொடிகளுடனும் ஊர்வலமாகச் சென்று பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்தக் கொடி பவனியைக் காண திரளான பக்தர்கள் திரண்டனர். இதனையொட்டி நகர் முழுவதும் போதிய காவல் துறை பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory