» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முன்விரோதத்தால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு – 2 பேர் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 8:07:14 PM (IST)
கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதி நகரைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் ஞானதிரவியம் (30). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று பாரதி நகர் பகுதியில் வைத்து ஞானதிரவியத்தை வழிமறித்த கும்பல், அவருடன் தகராறில் ஈடுபட்டுத் திடீரென அரிவாளால் வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கொலை முயற்சியில் ஈடுபட்டது பாரதி நகரைச் சேர்ந்த செல்லபாண்டி மகன் மகாராஜன் (33) மற்றும் முத்து மகன் முத்துராஜ் (25) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த மகாராஜன் மற்றும் முத்துராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் இன்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கப்பலை கடத்திய 4 பேர் சிக்கினர் : சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையால் பரபரப்பு
வெள்ளி 24, ஜூலை 2026 8:36:12 PM (IST)

நடைப்பயிற்சி சென்றவரை கல்லால் தாக்கி கொலை முயற்சி – சரித்திரப் பதிவேடு குற்றவாளி கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 8:04:45 PM (IST)

குஜராத்தில் வெள்ளப்பெருக்கு: தூத்துக்குடி – ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து!
வெள்ளி 24, ஜூலை 2026 7:32:45 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் அலங்கார மீன் வளர்ப்பு குறித்த 2 நாள் பயிற்சி நிறைவு!
வெள்ளி 24, ஜூலை 2026 5:06:10 PM (IST)

சோலார் ஆலையில் ரூ.1½ லட்சம் காப்பர் வயர்கள் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை!
வெள்ளி 24, ஜூலை 2026 4:47:27 PM (IST)

குடும்பத் தகராறில் விஷம் அருந்திய நபர் உயிரிழப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 4:40:05 PM (IST)








