» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்பத் தகராறில் விஷம் அருந்திய நபர் உயிரிழப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 4:40:05 PM (IST)
கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஷ மாத்திரையை சாப்பிட்ட நபர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வஉசி தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் சுரேஷ் (42). மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த சுரேஷ், கடந்த 20ஆம் தேதி பன்றிக்கு வைக்கும் விஷ மாத்திரையைச் சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் அலங்கார மீன் வளர்ப்பு குறித்த 2 நாள் பயிற்சி நிறைவு!
வெள்ளி 24, ஜூலை 2026 5:06:10 PM (IST)

சோலார் ஆலையில் ரூ.1½ லட்சம் காப்பர் வயர்கள் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை!
வெள்ளி 24, ஜூலை 2026 4:47:27 PM (IST)

தூத்துக்குடியில் பெண் கொடூர கொலை: மீனவர் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 4:24:58 PM (IST)

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவிகள் கருப்பு உடை அணிந்து போராட்டம்!
வெள்ளி 24, ஜூலை 2026 3:58:42 PM (IST)

நெல்லை கேன்சர் மருத்துவமனை கட்டிடப் பணிக்கு டிஎம்பி அறக்கட்டளை ரூ.1 கோடி நிதி உதவி!
வெள்ளி 24, ஜூலை 2026 3:42:10 PM (IST)

நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தினர் குண்டுகட்டாகக் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 3:22:26 PM (IST)








