» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குஜராத்தில் வெள்ளப்பெருக்கு: தூத்துக்குடி – ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து!

வெள்ளி 24, ஜூலை 2026 7:32:45 PM (IST)

floodTrain.jpg

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, தூத்துக்குடியில் இருந்து ஓகா செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 19568) ரத்து செய்யப்பட்டது.

ஓகாவில் இருந்து வர வேண்டிய இணை ரயில் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மறுமார்க்கமாகத் தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாகத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "தூத்துக்குடியில் இருந்து குஜராத் மாநிலம் ஓகாவுக்கு வரும் ஜூலை 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11:40 மணிக்கு புறப்பட வேண்டிய 'விவேக் எக்ஸ்பிரஸ்' ரயில் (வண்டி எண்: 19567) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதன் இணை ரயில் (வண்டி எண்: 19568) ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory