» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் விபரங்களைச் சுய கணக்கெடுப்பு முறையில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 2027 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையொட்டி, (Self-Enumeration) பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இப்பேரணியை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான சி.ப்ரியங்கா கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உதவியாட்சியர் (பயிற்சி), துணை ஆணையர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியில் தூத்துக்குடிப் பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பெருந்திரளாகப் பங்கேற்று, மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் மற்றும் அலைபேசி/இணையம் வழி சுய கணக்கெடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:14:15 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!
வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)

திருச்செந்தூர் புதிய பேருந்து நிலைய விவகாரம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
வெள்ளி 17, ஜூலை 2026 5:12:51 PM (IST)








