» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் விபரங்களைச் சுய கணக்கெடுப்பு முறையில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 2027 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையொட்டி, (Self-Enumeration) பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இப்பேரணியை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான சி.ப்ரியங்கா கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உதவியாட்சியர் (பயிற்சி), துணை ஆணையர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியில் தூத்துக்குடிப் பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பெருந்திரளாகப் பங்கேற்று, மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் மற்றும் அலைபேசி/இணையம் வழி சுய கணக்கெடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








