» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் பகுதிகளில் காவல் துறையினர் நடத்திய தீவிரச் சோதனையில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துளளனர்.
தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ.உ.சி நகர் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்த இருவரைப் பிடித்த தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் கே.டி.சி நகரைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் (20) மற்றும் பாரதிநகரைச் சேர்ந்த சந்தனசெல்வம் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 8 கிலோ 60 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு:
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மேரிஜெமிதா தலைமையிலான காவல் துறையினர் தாளமுத்துநகர் டேவிஸ்புரம் சந்திப்புப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முகமதுசதாலிபுரத்தைச் சேர்ந்த வேலு பிரியதர்ஷன் (19), லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ஜெகதீஸ் (21) ஆகிய இருவரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
சிப்காட் போலீசார்

சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காவுராஜன், தனசேகரன்நகர் பூங்கா அருகில் நடத்திய கண்காணிப்புப் பணியின் போது சட்டவிரோதமாகக் கஞ்சா வைத்திருந்த டூவிபுரத்தைச் சேர்ந்த நோவா பாக்யராஜ் (19), ரிஷிகுமார் (19) ஆகிய இருவரைக் கைது செய்தார். அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் குறித்துத் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:06:03 PM (IST)

மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:30:22 AM (IST)

தூத்துக்குடி குடிநீர் பிரச்னையில் அமைச்சர் மவுனம் ஏன்? — பாஜக சராமாரி கேள்வி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:11:16 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மதிப்புக் கூட்டப்பட்ட மீன்வளப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:02:45 AM (IST)

டி.எம்.பி. அறக்கட்டளை சார்பில் 30 பேருக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சி!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:08:10 AM (IST)








