» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!

வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குப் பொறுப்பு காவல் ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஸ்டீபன் ஜோஸ், நெல்லை மாவட்டத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனை அடுத்து காலியாக இருந்த பணியிடத்திற்கு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் பொறுப்பு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அவருக்குச் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள், காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்களின் பிரச்சனைகள் குறித்து நேரடியாகப் புகார் அளிக்கலாம் என்றும், அதற்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory